இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Sunday, November 27, 2011

தனிமை < Thanimai >


தனிமை < Thanimai >
நீ எனக்கு இல்லை என்று தெரிந்தும் , உனக்காக கண்ணீர் விட்டது என் கண்கள் ....
உனக்காக கண்ணீர் சிந்திய என் கண்களை கண்ணாடியில் பார்க்கும் போது ,
என் கரு விழிகளின் ஓரத்தில் காலம் கற்பித்த உண்மைகள் கண்ணீராய் கலங்கி  ,பனியின் சிறு துளி போல கண் சிமிட்டாமல் சிந்துகின்றன ....
என்னை  விலகி விட்ட பிறகும் உன்னை விரும்புவது என் தவறா ....
இல்லை என்னை விட்டு சென்றது உன் தவறா ...
நாம் சந்தித்து கொண்டது  காலத்தின் தவறா ?
தவறுகளை கண்டறிந்து தண்டனை தர போவதில்லை.
நாட்கள் நகர்ந்து செல்ல , நினைவுகள் மறந்து போகலாம்.
இன்று நிஜங்களாக நம் முன் இருப்பவை , நாளை நிழல்களாக பின்னால் போகலாம் ...
இன்று உன்னை மறக்க நேரம் இல்லாத எனக்கு , காலத்தின் கட்டாயத்தால் ஒரு நாள் உன்னை நினைக்கவும் நேரம் இருக்காது ....
நீ என் அருகில் இருந்த நிமிடங்கள்  எல்லாம் நீடிக்க வேண்டும் என்று விரும்பிய எனக்கு இனிமேல்  தனிமைதான் நீடிக்குமோ ...
உன்மேல் பாசம் வைத்து பழகிய பாவத்துக்காக நீ தந்த பரிசு இந்த தனிமை ....
தனிமை என்றும் வெறுமையை தருவதில்லை ...
தன்னம்பிக்கை தருகிறது ...
நீ இல்லாமலும் வாழ முடியும் என்று ....
உன்னோடு இருந்த இனிமையான காலங்கள் எல்லாம் ,
கற்ப்பனைகலாகவும் , கனவுகளாகவும் என் கண்களுக்குள் புகுந்து கண்ணீராக வேதியல் மாற்றம் பெறுகின்றன ...
தனிமையில் இனிமை காண முடியுமா என்றால் , முடியும் என்பேன் ....
தனிமையை உணர்த்தும் ஒரு உயிர் உன்னோடு இருந்திருந்தால் .....

2 comments:

  1. ""இன்று உன்னை மறக்க நேரம் இல்லாத எனக்கு , காலத்தின் கட்டாயத்தால் ஒரு நாள் உன்னை நினைக்கவும் நேரம் இருக்காது ...."" superb lines..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பதியலாமே ...