இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Friday, January 27, 2012

நம்பிக்கை

இருளில் ஏற்றப்படும் விளக்குகள் இருளை அகற்றுவதில்லை ... மறைக்கின்றன ...
உனக்குள் உருவாகும் தோல்விகள் , வெற்றியை தடுப்பதில்லை ... தள்ளி வைக்கின்றன ...

தோல்விகள்  உன்னை தொடர்ந்தாலும் , உந்தன் தோள் மேலே அமர்ந்தாலும் ...
 அவற்றை தோழனாக ஏற்றுக்கொள் ...

உன்னுடைய  தோல்வியில் இன்னொருவனின் வெற்றி ஒளிந்திருக்கிறது ...
உன்னுடைய வெற்றியில் மற்றொருவனின் தோல்வி மறைந்திருக்கும் ...

தொடர் தோல்வி அனுபவத்தை தரும் , வெறும்  வெற்றியோ ஆணவத்தை தரும் ..
ஆணவத்தால் அழிவதை விட அனுபவத்தால் உயர்ந்திடு தோழா ....

உயிர் உள்ளவரை போராடு ....
உலகில் உள்ளவரை நடைபோடு ....





1 comment:

  1. மிகவும் அர்த்தமுள்ள கவிதை.. நன்றி சகோ 👍👍

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பதியலாமே ...