காதல் சொன்ன நேரம் ...
விடியாத அதிகாலை நேரம் ...
மாசற்ற நெடுஞ்சாலை ஓரம் ...
வாசத்துடன் பனிக்காற்றும் வீச ...
நேசத்துடன் இரு கண்கள் பேச ...
நான் காதல் சொன்ன நேரம் ...
அதை அவள் காதில் சொன்ன நேரம் ...
அந்த வானவில்லின் ஓரம் ,
புதிய வண்ணமொன்று தோன்ற ....
அவள் கண்கள் என்னை நோக்க ....
என்மேல் காதல் சாரல் அடிக்க ...
கட்டி வைத்த மனசு , அது கட்டவிழ்த்து
பறக்க ...
மூடி வைத்த வெட்கம் , கூடி வந்து நிற்க
...
பேச நினைத்த போதும் , அடடா வார்த்தை
கிடைக்கவில்லை ...
தமிழன் என்ற போதும் , எனக்கு மொழியும்
உதவவில்லை ...
மௌனம் காதல் பேச , கண்கள் கவிதை பாட
..
கைகள் தாளம் போட , கால்கள் நடனம் ஆடின
...
அவள் மூச்சு காற்றின் வெப்பம் ,
எந்தன் சுவாச காற்றை எரிக்க ...
என் இதைய துடிப்பின் வேகம் , அந்த ஒளியின்
வேகத்தை மிஞ்ச ...
அவள் கைகள் தொட்ட தருணம் , எந்தன் உயிரை
தொட்டது மரணம் ...
அவள் ஒளித்து வைத்த காதல் , என்
உதிரம் முழுதும் பரவ ....
காதல் என்ற காட்டில் , வேண்டி மாட்டிகொண்டோம்
...
திரும்பி செல்லப் பார்த்தும் , பாதை தெரிய
இல்லை ...
திரும்பி செல்ல முயன்றால் , அந்த காதல் உண்மை
இல்லை ...
அன்று , காதல் தவறு என்றேன் ... இன்றோ காதல் கடிதம்
தந்தேன் ....
வேலி போட்ட நானே , இன்று எந்தன் பயிரை
மேய்ந்தேன் ...
காதல் என்ற நூலில் , நல்ல கல்வி ஒன்று
கற்றேன் ...
காதல் தோற்பதும் இல்லை , வெல்வதும் இல்லை ...
எண்ணங்கள் ஏமாற்றும் போதும் ,
ஏமாற்றம் வலிக்கும் போதும் ...
அச்சங்கள் அழைக்கும் போதும் ,
நம்பிக்கை நகைக்கும் போதும்
காதலர்கள் தோற்கிறார்கள் , காதலை
தூற்றுகிறார்கள் ...
எண்ணங்களையும் ஏமாற்றங்களையும் ,
அச்சங்களும் நம்பிக்கைகளையும்
வென்றவர்கள் ...
காதலை போற்றுகின்றனர் ....
வெற்றியும் தோல்வியும் காதலுக்கு
இல்லை , காதலர்களுக்கே ...
காதல் சொன்ன நேரம் .... என் வாழ்வை
உணர்ந்த நேரம் ... !