மரங்களின் மடல் ...
மரங்களின் மடல் ... |
உயிர் இருந்தும் நிலையானோம் ...
நிலை பெற்றும் நிழல் தந்தோம் ...
நிழல் தந்து சிலை காத்தோம் ...
நான் காத்த சிலை உன்னை காக்கும் என்றாய
சிலை காத்த என்னை ஏன் காக்க மறந்தாய் ...
கரிவாயு உட்கொண்டு , உயிர் வாயு உமக்களித்தோம் ....
பிறர் , உயிர் பிழைக்க மழை தந்தோம் ...
வந்த , மழை கொண்டே உயிர் பிழைத்தோம் ....
எழுத்துக்கு காகிதமாய் ,உலகெங்கும் உருப்பெற்றோம் ...
பசுமை என்னும் பாற்கடலை , மண் மேலே படைத்திருந்தோம் ....
ரசனை என்பது சிறிதுமின்றி , வனத்தோடு வதம் செய்தாய் ...
வானளவு வளர்ந்திருந்தோம் , வாள் கொண்டு வதை செய்தாய் ...
நோயற்ற வாழ்வளித்தோம் , நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டாய் ...
வானம் பார்த்த பூமியிலே , வனம் காக்க யாருமில்லை ...
வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் , வீதிக்கே மழை கொடுப்போம் ...
காட்டை நீ காத்து வந்தால் , நாட்டுக்கே நலம் சேர்ப்போம் ...
வனம் யாவும் செழித்திருந்தால் , வளமாகும் தேசம் எங்கும் ...
Fantastic one
ReplyDelete