இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Monday, February 20, 2012

மரங்களின் மடல் ...

 மரங்களின் மடல் ...

மரங்களின் மடல் ...

உயிர் இருந்தும் நிலையானோம் ...

நிலை பெற்றும் நிழல் தந்தோம் ...

நிழல் தந்து சிலை காத்தோம் ...

நான்  காத்த சிலை உன்னை காக்கும் என்றாய

சிலை காத்த என்னை ஏன் காக்க மறந்தாய் ...

கரிவாயு உட்கொண்டு , உயிர் வாயு உமக்களித்தோம் ....


பிறர்  , உயிர் பிழைக்க மழை தந்தோம் ...

வந்த , மழை கொண்டே உயிர்  பிழைத்தோம் ....

எழுத்துக்கு காகிதமாய் ,உலகெங்கும் உருப்பெற்றோம் ...

எதையெதையோ உருவாக்க , எரிபொருளாய் உருக்குலைந்தோம் ...

பசுமை என்னும் பாற்கடலை , மண் மேலே படைத்திருந்தோம்  ....

ரசனை என்பது சிறிதுமின்றி , வனத்தோடு வதம் செய்தாய் ...

வானளவு வளர்ந்திருந்தோம் , வாள் கொண்டு வதை செய்தாய் ...

நோயற்ற வாழ்வளித்தோம் , நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டாய் ...

வானம் பார்த்த பூமியிலே , வனம் காக்க யாருமில்லை ...

வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் , வீதிக்கே மழை கொடுப்போம் ...

காட்டை நீ காத்து வந்தால் , நாட்டுக்கே நலம் சேர்ப்போம் ...

வனம் யாவும் செழித்திருந்தால் , வளமாகும் தேசம் எங்கும் ...

இயற்கை வளங்களை  காத்திடுவோம் , இயற்கையோடு  இணைந்திருப்போம் ...



1 comment:

உங்கள் கருத்துகளை பதியலாமே ...