பேஸ்புக் , கூகுள் : இந்தியாவில் தடையா ???
சில நாட்களுக்கு முன்னர் , இந்திய உயர் நீதிமன்றம் ஒரு வழக்கின் பெயரில் , கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற இணையதளங்களுக்குஎச்சரிக்கை விடுத்துள்ளது ...
இந்த தளங்களில் சில மதங்களுக்கும் , அரசுக்கும் எதிரான மற்றும் முரண்பாடான தகவல்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என்றும் , இல்லையேல் சீனாவில் இருப்பது போல் இந்தியாவிலும் அந்த தளங்களுக்கு தடை விதிக்கப்படும் என்பது போல் எச்சரித்துள்ளது ...
பேஸ்புக் என்பது மிகப்பெரிய பிணையம் ... அதில் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான பதிவுகள் புதிதாக ஏற்றப்படுகின்றன ... அவை அனைத்தையும் கண்காணித்து , தணிக்கை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை ஏன் அரசு ஏற்க மறுக்கிறது என்று தெரியவில்லை ....
சமீப காலமாக தொலைதொடர்பு துறை எடுக்கும் சில முடிவுகள் , மக்களின் உரிமைகளை பறிப்பது போல் எனக்கு தோன்றுகிறது ....
சில மாதங்களுக்கு முன்னர் , குறுஞ்செய்தி எனப்படும் ( SMS ) அனுப்ப சில கட்டுபாடுகளை அரசு விதித்தது ...
ஒரு நாளைக்கு 100 SMS என்றது , பின்னர் பல தரப்புகளில் இருந்து வந்த வேண்டுகோளின் பெயரில் அது 200 ஆகா அதிகரிக்கப்பட்டது ...
தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் SMS போன்றவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்று அரசு வாதிட்டது ...
ஆனால் இன்றும் எனக்கு அது போன்ற விளம்பர SMS வந்து கொண்டுதான் இருக்கிறது ...
இப்படி மக்கள் நலன் என்ற பெயரில் மக்களின் உரிமைகள் பறிக்கபடுவதாக நான் கருதுகிறேன் ...
இது தொடர்ந்தால் , பேஸ்புக் , கூகுள் போன்ற இணையதளங்களின் பாடு என்ன ஆகும் என்பது கேள்வி குறிதான் ...
we all need our freedom atleast in this social sites
ReplyDeleteYeah ... But Freedom kodutha , government polappu enna aagarathu ...
ReplyDelete