இங்கே தேடு < Search Here >

கதை கவிதை < Kathai Kavithai >

தமிழில் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் எனக்கு சிறிதளவு விருப்பம் உண்டு ...
எந்தன் சிறு சிறு கிறுக்கல்களை இங்கே பதிவு செய்கிறேன் , படித்து விட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவு செய்யுங்கள் ...
நன்றி ... நட்புடன் ... சந்தோஷ் ...

mGinger

Saturday, June 9, 2012

வேலியே பயிரை மேய்வதா ... ? பேருந்து நடத்துனர் மற்றும் ஒட்டுனரே பயணிகளின் உடைமைகளை திருடுவதா .... ??

வேலியே பயிரை மேய்வதா ... ? 

அன்று சனிக்கிழமை , மதியம் மணி 4 இருக்கும் ...நண்பர்களுடன் கொடிவேரி சென்றுவிட்டு வீடு திரும்பினேன் ...

கொடிவேரியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தோம் ...

என் பணம் மற்றும் கைப்பேசி அனைத்தும் , என் நண்பனின் பையில் வைத்திருந்தேன் ...

இருக்கைகள் நெருக்கமாக இருந்ததால் , நண்பன் அந்த பையை , இருக்கைக்கு மேல் இருக்கும் பகுதியில் வைத்தான் ...

பேருந்து சத்தியமங்கலத்தில் நின்றது ... எல்லோரும் இறங்க பேருந்து காலி ஆனது ... நாங்களும் தேநீர் அருந்த கீழே இருங்கினோம் ...

பின்னர்தான்  அறிந்தோம் , எங்கள் பை அந்த பேருந்தில் உள்ளது என்று , மறந்து அங்கேயே வைத்து விட்டோம் ...

நண்பன் சென்று , நடத்துனரிடம் சொல்லிகேட்டு அந்த பையை எடுத்து வந்தான் ...

அதை திறந்து பார்க்கையில் அதிர்ச்சி ... உள்ளே இருந்த எனது பணப்பை ( Wallet ) அதில் இல்லை ... எங்கும் தேடி கிடைக்கவில்லை ... 


ஒரு வேலை அந்த பேருந்தில் விழுந்திருக்குமோ என்று அங்கும் சென்று தேடினான் , கிடைக்கவில்லை ... 


ஓட்டுனரிடம் சென்று கேட்டோம் , தெரியாது என்று சொல்லி விட்டார் ...


அங்கேயே மீண்டும் தேடினோம் ... அப்போது நடத்துனர் வர , அவரிடம் கேட்டோம் ... அவரும் தெரியாது என்று கூற ... செய்வது அறியாது அங்கேயே அமர்ந்தோம் ...




பின்னர் , ஓட்டுனரிடம் ஏதோ பேசிய நடத்துனர் எங்களை அழைத்தார் ...


இதுவா பாருங்க என்று கூறு எனது பணப்பையை எடுத்து நீட்டினார் ...


எனது பணப்பை தான் தினமும் பார்த்தது தான் , இருந்தாலும் அப்போது அதை பார்த்ததும் இனம் புரியாத மகிழ்ச்சி ...


ஆமாம் என்று கூறி , அதை வாங்க கை நீட்டினேன் , "சரிப்பா , ஒரு 50 ரூபாய் எடுத்துட்டு தர்றேன் " என்றார் நடத்துனர் ...
எதற்கு  என்று நான் கேட்க்க , " உனக்கு வேணுமா வேண்டாமா ? வேணும்னா 50 ரூபாய் கொடுத்துட்டு வாங்கிட்டு போ " என்று எனது பொருளுக்கு என்னிடமே பேரம் பேசினார் ... எங்கள் நிலைமையை நடத்துனரிடம் எடுத்து கூற , அவர் கொடுத்துவிடும் படி ஓட்டுனரிடம் கூற ... ஒரு வழியாக பணப்பை கிடைத்தது ...


நிம்மதியாக ஒரு கோவை பேருந்தில் ஏறினோம் ... திறந்து பார்க்கையில் மீண்டும் அதிர்ச்சி ... 450 ருபாய் வைத்திருந்தேன் வெறும் 250 மட்டுமே உள்ளே இருந்தது ... இறங்கி வருவதற்குள் அந்த பேருந்து கிளம்பி விட்டது ...


வேறு வழி இன்றி , 200 ரூபாயை பறிகொடுத்து விட்டு , கோவை வந்து சேர்ந்தோம் ....


இப்படி வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி .... ?

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பதியலாமே ...